இருளர் வாழ்வை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்கு பாராட்டு. அதே நேரத்தில் வன்மத்தை திட்டமிட்டு வளர்த்தெடுக்காதீர்கள். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் வசிக்கும் 1300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வேண்டி வீரவாஞ்சி முருகன் மலையில் இன்று (26.09.201 ஞாயிறு) நடந்த போராட்டம். இலங்கை ஏதிலியர்களை சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என ஒன்றிய அரசு கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது - வ.கெளதமன் பேட்டி. சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் அவர்களுடன் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களின் ரத்த உறவுகள், தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச்செயலாளர் வ.கௌதமன் சந்திப்பு. திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி சிறப்புச் சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அப்புறப்படுத்துங்கள். ஐயா சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு தமிழ்ப் பேரரசு கட்சி தனது மலர் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு போராட்டக் களங்களில் தமிழக மக்களின் கலை, கலாச்சாரம், இயற்கைவளம், மொழி, கல்வி, தொழில், வேலைவாய்ப்பு உரிமைகள் உள்பட பல்வேறு அரசியல் உரிமைகளுக்காக உக்கிரமான போராட்டக்களங்களில் சமரசமின்றி போராடிவரும் நாங்கள், அதைவிட மிகப்பரந்த அரசியல் களத்திலும் எங்கள் போராட்டத்தை விரிவாக்க முடிவுசெய்திருக்கிறோம். களப்போராட்டங்களில் தொடர்ந்து நின்றுகொண்டிருக்கும் அதேவேளை உரிமைகளை வென்றெடுக்க அரசியல் களத்திலும் பங்கேற்கவேண்டும் என்பதே எங்கள் கொள்கையாகும். அரசியல் என்கிற ஆயுதத்தை கொண்டே நமது உரிமைகள் அனைத்தையும் மத்திய, மாநில ஆளும் சக்திகள் ஈவிரக்கமின்றி வேரறுக்கின்றன. எனவே அதே அரசியல் என்னும் ஆயுதத்தை கையிலெடுத்தே நமது உரிமைகளை மீட்டெடுக்க விரும்புகிறோம். இதன் அடிப்படையில், எங்கள் மக்களின் ஆதரவோடு மாணவர்களும் இளைஞர்களுமான நாங்கள் உறுதியாக முடிவெடுத்து, தமிழ்ப் பேரரசுக் கட்சி என்கிற புதிய கட்சியை தொடங்குவதை இன்று பெருமிதத்தோடு அறிவிக்கிறோம். தமிழக மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் இருந்தாலும், சனநாயக யுத்தக் களத்தில் நாங்கள் புதிய சக்தியாக உறுதியாக உருவெடுப்போம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ‘சொல்லுக்கு முன் செயல்’ என்பதே இதுவரை எங்களது அரசியல் வியூகமாக இருந்துவருகிறது. இனிமேலும் அதுவே தொடரும். எனவே தூய்மையான எங்கள் செயல்பாட்டால் தமிழக மக்களின் பேராதரவைப் பெறுவோம். நாங்கள் கட்சியை ஆரம்பித்துவிட்டு ஆதரவைத் தேடிப் போகவில்லை. மாறாக தமிழ்நாட்டு மக்களின் ஆதரவைப் பல களங்களில் கண்டு, கடுமையான அடக்கு முறைகளுக்கு உள்ளான நிலையில்தான் இம்முடிவை எடுத்திருக்கிறோம். ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு) போராட்டத்தில் போராடி வெற்றிகண்ட இளைய தலைமுறையினரான நாங்கள் அரசியல் களத்திலும் வெற்றிபெறுவோம். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த எங்கள் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம். உலகின் தொன்மையான இனத்துக்குச் சொந்தக்காரர்கள் நாம். ஆனால் இன்று நமது நீர் ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன, நிலம் மலடாக்கப்பட்டிருக்கிறது. நமது விவசாயிகள் வாழவழியின்றி தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். மீனவர்களின் மீன்பிடி உரிமைகள் பறிக்கப்பட்டு அவர்கள் நித்தம் நித்தம் கொல்லப்படுகிறார்கள். எங்கள் மாணவர்களின் கல்வி, சமூகநீதி உரிமைகள் மறுக்கப்படுகின்றன. நமது தமி...